Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் 2022-; கொல்கத்தா அணி பவுலிங் தேர்வு...

Webdunia
சனி, 26 மார்ச் 2022 (19:27 IST)
2022 ஆம் ஆண்டுக்கான 15-வது சீசன் ஐபிஎல் போட்டிகள் இன்று (மார்ச் 26) மும்பையில் தொடங்குகிறது.

இந்த முறை 10 அணிகள் பங்கேற்கும் இந்த ஐபிஎல் போட்டியில் அதிக தடவை ஐபிஎல் கோப்பையை வென்ற அணிகள், அதிக முறை இறுதி சுற்றுக்குள் நுழைந்த அணிகள் என்ற அடிப்படையில் அணிகள் ஏ மற்றும் பி என இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

இன்றைய போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புதிய கேப்டன் ஜடேஜா தலைமையில் களமிறங்குகிறது.

இதுவரை சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் 25 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் சென்னை அணி வெற்றிகளை பதிவு செய்துள்ளது என்பது கூடுதல் தகவல்.

இந்நிலையில் , தற்போது டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர்  முதலில் பந்து வீச தேர்வு செய்துள்ளார். சென்னை கிங்ஸ் இன்று    முதலில் பேட்டிங் செய்யவுள்ளதால் போட்டி எப்படி இருக்கும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டி 20 கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த ஜோஸ் பட்லர்!

கம்பீருக்கு ஆல்ரவுண்டர்கள் அதிக பாசம்… ஆனால் அணிக்குள் மூன்று பேர் எதற்கு?- அஜிங்யா ரஹானே கேள்வி!

கோலி ஆக்ரோஷமாக செயல்பட்டாலும் அதில் கிங்… ஆனால் கில்?- சஞ்சய் மஞ்சரேக்கர் விமர்சனம்!

தோனிதான் அந்த விஷயத்தில் மாஸ்டர்… ஷுப்மன் கில் அதைக் கற்றுக்கொள்ளலாம்- கேரி கிரிஸ்டன் அறிவுரை!

ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் செய்வதில் சிக்கலா?.. இந்திய அணிக்குப் பின்னடைவு!

அடுத்த கட்டுரையில்
Show comments