Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர்வதேச மாஸ்டர்ஸ் கிரிக்கெட் தொடர்.. இந்தியா சாம்பியன்.. சச்சின் எடுத்த ரன் எவ்வளவு?

Siva
திங்கள், 17 மார்ச் 2025 (07:42 IST)
சர்வதேச மாஸ்டர்ஸ் கிரிக்கெட் போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில், நேற்று இந்தியா மற்றும் மேற்கிந்திய அணிகளுக்கு இடையே இறுதி போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்திய தீவுகள், 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்தது. ஸ்மித் 45 ரன்களும், சிம்மன்ஸ் 57 ரன்களும் எடுத்தனர். இந்திய தரப்பில் வினய் குமார் அபாரமாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனை அடுத்து, 149 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இந்திய மாஸ்டர் அணி விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களான அம்பத்தி ராயுடு அபாரமாக விளையாடி 74 ரன்கள் எடுத்தார். இன்னொரு தொடக்க ஆட்டக்காரர் சச்சின் டெண்டுல்கர் 25 ரன்கள் எடுத்தார்.

இறுதியில், இந்திய மாஸ்டர் அணி 17.1 ஓவர்களில் 149 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அம்பத்தி ராயுடு ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா - இங்கிலாந்து 3வது டெஸ்ட் போட்டி.. டாஸ் வென்றது யார்? இரு அணி வீரர்களின் முழு விவரங்கள்..!

லார்ட்ஸ் மைதானம்னா இந்தியாவுக்கு Bad Luck? வரலாறு அப்படி! - இன்றைக்கு என்ன நடக்கும்?

என்னிடம் இருந்து பணத்தைப் பெற்று ஏமாற்றிவிட்டார்… சம்மந்தப்பட்ட பெண் மீது யாஷ் தயாள் புகார்!

வாழ்நாளில் எப்போதாவது கிடைக்கும் வாய்ப்பு… முல்டர் செய்தது தவறு – கெய்ல் விமர்சனம்!

பும்ரா இல்லாத போட்டிகளில்தான் இந்திய அணிக்கு வெற்றி அதிகமா?.. புள்ளிவிவரம் சொல்வது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments