Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனி சரியாக 7.29 மணிக்கு ஓய்வு பெற்றது ஏன் – இதுதான் காரணமா?

Webdunia
திங்கள், 17 ஆகஸ்ட் 2020 (07:34 IST)
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி ஓய்வு முடிவு பற்றிய சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி ஓராண்டுக்கு மேலாக ஆன நிலையில் அவரின் எதிர்காலம் என்ன என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. இதையடுத்து இரு நாட்களுக்கு முன்னர் ஐபிஎல் போட்டிகளுக்காக  சென்னையில் பயிற்சி மேற்கொள்வதற்காக ராஞ்சியில் இருந்து தனி விமானத்தில் தோனி சென்னை வந்த தோனி, இன்ஸ்டாகிராமில் தனது ஓய்வு முடிவை அறிவித்தார்.

அதில் ‘இன்று மாலை 7.29 முதல் நான் ஓய்வு பெற்றதாக நீங்கள் கருதலாம்’ எனத் தெரிவித்திருந்தார். அவரின் முடிவு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இப்ப்போது ஏன் சரியாக 7.29 க்கு அவர் ஓய்வு முடிவை அறிவித்தார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுபற்றி விசாரிக்கையில் ‘உலகின் தென் பகுதியில் உள்ள நாடுகள் பலவற்றில் அன்று அந்த நேரத்தில் தான் சூரியன் மறைவதாகவும் அதை குறிப்பிட்டே தனது ஓய்வு முடிவை அப்போது அறிவித்துள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

நான் ஓய்வை அறிவித்துவிட்டால் என்னை நீங்கள் பார்க்க முடியாது… கோலி தடாலடி!

மைதானத்தில் வழங்கிய தரமற்ற உணவால் மயங்கி விழுந்த ரசிகர்..! கர்நாடகா கிரிக்கெட் சங்கம் மீது வழக்குப்பதிவு..!!

“தொடர்ந்து நான்காவது தோல்வி… வீரர்கள் அதை ஒப்புக்கொள்ள வேண்டும்” – சஞ்சு கேப்டன் ஆதங்கம்!

சி எஸ் கே அணியை விட்டு விலகுகிறாரா ஸ்டீபன் பிளமிங்? காசி விஸ்வநாதன் பதில்!

கேப்டன் சாம் கர்ரன் அபார பேட்டிங்.. பஞ்சாப் அணிக்கு ஆறுதல் வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments