Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகளிர் டி20 இறுதிப்போட்டி: வங்கதேசத்திடம் தோற்ற இந்திய அணி

Webdunia
ஞாயிறு, 10 ஜூன் 2018 (14:59 IST)
பெண்களுக்கான ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் இறுதித்தொடரில், இந்திய அணி வங்கதேசத்திடம் தோற்றுள்ளது.
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், மலேசியா, சிங்கப்பூர் ஆகிய 6 அணிகளும் மோதும் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
 
நேற்றைய அரையிறுதிப்போட்டியில் பாகிஸ்தானுடன் மோதிய இந்திய அணி அபார பெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதன்மூலம் இந்திய அணி தொடர்ச்சியாக 7-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்த பெருமையை அடைந்தது.
 
இந்நிலையில் இன்று நடைபெற்ற இந்தியா-வங்காளதேச அணிகளுக்கான இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தது.
அதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணி, 20 ஓவர்களில், 9 விக்கெட் இழப்பிற்கு 112 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் 56 ரன்களை எடுத்தார்.
 
113 ரன்கள் எடுத்தால் வெற்றி, என களமிறங்கிய வங்கதேச அணி, 20 ஓவர்களில், 7 விக்கெட் இழப்பிற்கு 113 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. இந்திய அணியின் தோல்வியால், ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குருவைப் பெருமைப்பட வைத்த மாணவன் அபிஷேக் ஷர்மா!

இனி அவரைப் போன்ற வீரர்களுக்குதான் அதிகம் ஆதரவு தரப்போகிறோம்.. கம்பீர் கருத்து!

நான் வியந்த மிகச்சிறந்த பேட்டிங் அபிஷேக் ஷர்மாவுடையதுதான்… ஜோஸ் பட்லர் ஆச்சர்யம்!

உலக சாம்பியன் குகேஷை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா.. குவியும் வாழ்த்துக்கள்..!

இந்திய அணியை டாஸின் போது கேலி செய்து ஊமைக்குத்து குத்திய ஜோஸ் பட்லர்!

அடுத்த கட்டுரையில்
Show comments