Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Tuesday, 1 April 2025
webdunia

இந்திய அணி கேப்டன் விராட் கோலிக்கு தீவிரவாதிகள் மிரட்டல் : என்.ஐ.ஏ எச்சரிக்கை !

Advertiesment
விராட் கோலி
, செவ்வாய், 29 அக்டோபர் 2019 (16:34 IST)
வங்காள தேச அணி  இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது.இந்த முதல் போட்டியில் இந்திய அணிக்கு எதிராகவும், கேப்டன் விராட்கோலிக்கு எதிராகவும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாங்காள தேச கிரிக்கெட் அணி - இந்தியா  கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான டி-20 கிரிக்கெட் போட்டி வரும் நவம்பர் 3 ஆம் தேதி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடக்கவுள்ளது.
 
இந்நிலையில் இப்போட்டில் இந்திய அணி கேப்டன் விரால் கோலி மற்றும்  இந்திய அணி மீது, கேரளாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஆல் இந்திய லஷ்கர் இயக்கம் தாக்குதல் நடத்த இருப்பதாக என்.ஐ.ஏ  அமைப்புக்கு ஒரு மொட்டைக் கடிதாசி வந்துள்ளது.
 
இதனையடுத்து, இந்திய அணிக்கு அதிகபட்ச பாதுகாப்பு வழங்கும்படி டெல்லி போலீஸுக்கு என்.ஐ.ஏ வலியுறுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகின்றன.
 
இந்திய அணிக்கு எதிரான மிரட்டல் விடுத்து எழுதப்பட்ட மிரட்டல் கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டி 20 உலகக்கோப்பை – அயர்லாந்து நேரடியாக தகுதி !