Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சாம்பியன்ஸ் டிராபிக்காக இந்திய அணியில் விளையாடப்போவது இவர்கள் தான்!

சாம்பியன்ஸ் டிராபிக்காக இந்திய அணியில் விளையாடப்போவது இவர்கள் தான்!
, திங்கள், 8 மே 2017 (13:02 IST)
ஜூன் மாதம் தொடங்கும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில்யில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.


 
 
ஐசிசி-க்கும் பிசிசிஐ-க்கும் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக, ஐசிசி நடத்தும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இந்தியா அணியை அறிவிப்பதில் தாமதம் காட்டி வந்தது பிசிசிஐ.
 
சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் பங்கேற்கும் அணியை அறிவிக்கும் கடைசி தேதியான ஏப்ரல் 25 ஆம் தேதி முடிந்தும் பிசிசிஐ இந்திய அணியை அறிவிக்கவில்லை. 
 
இந்நிலையில் இன்று நடந்த கூட்டத்தில் 15 பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. விராட் கோலி (கேப்டன்), சிகர் தவான், ரோகித் சர்மா, ரஹானே, தோனி (கீப்பர்), யுவராஜ், கேதார் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, அஸ்வின், ஜடேஜா, உமேஷ் யாதவ், முகமது சமி, புவனேஸ்வர் குமார், பும்ரா, மணீஸ் பாண்டே ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என்னை மன்னித்துவிடுங்கள் ப்ளீஸ்: கோலி டிவிட்டரில் வருத்தம்!!