Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிரிஸ்பனில் இந்திய வீரர்களுக்கு ஏகப்பட்ட கெடுபிடி – கடுப்பில் டீம் இந்தியா!

பிரிஸ்பனில் இந்திய வீரர்களுக்கு ஏகப்பட்ட கெடுபிடி – கடுப்பில் டீம் இந்தியா!
, புதன், 13 ஜனவரி 2021 (09:32 IST)
பிரிஸ்பேனில் நடக்கும் நான்காவது டெஸ்ட் போட்டிக்காக இந்திய அணி பிரிஸ்பேனில் உள்ள ஒரு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி ஆஸியின் பிரிஸ்பேனில் நடக்க உள்ளது. இதற்காக இந்திய வீரர்கள் அனைவரும் பிரிஸ்பேனில் உள்ள ஒரு விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். ஆனால் அந்த விடுதியில் வீரர்கள் தங்கியிருக்கும் தளத்தை விட்டு வெளியே செல்லக்கூடாதாம். அதே போல அறை நிர்வாகத்துக்கும் வேலையாட்கள் வரமாட்டார்களாம். வீரர்களே ஒய்வறை முதலியவற்றை சுத்தம் செய்யக் கொள்ள வேண்டுமாம். விடுதியில் உள்ள ஜிம் மற்றும் நீச்சல்குளம் ஆகியவற்றைப் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாம். இதனால் இந்திய வீரர்கள் பயங்கர அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

ஆனால் ஹோட்டலுக்கு வெளியே ஆஸ்திரேலிய மக்கள் மிகவும் சுதந்திரமாக வாழ்ந்து வருவதாகவும் தங்களுக்கு மட்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாகவும் வீரர்கள் குமைச்சலில் உள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விராட் கோலியின் சகோதரர் பகிர்ந்த புகைப்படத்தால் உருவான குழப்பம்!