Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Friday, 28 March 2025
webdunia

சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியை தொடங்கிய இந்திய அணி வீரர்கள்!

Advertiesment
சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியை தொடங்கிய இந்திய அணி வீரர்கள்!
, திங்கள், 1 பிப்ரவரி 2021 (21:43 IST)
சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியை தொடங்கிய இந்திய அணி வீரர்கள்!
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்திய வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது 
 
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்திய சுற்றுப் பயணம் செய்ய உள்ள நிலையில் இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் பிப்ரவரி 5ஆம் தேதி தொடங்க உள்ளது 
 
இதனை அடுத்து இந்திய மற்றும் இங்கிலாந்து வீரர்கள் தற்போது சென்னையில் முகாமிட்டுள்ளனர். இந்த நிலையில் சென்னை சேப்பாக்கம் விளையாட்டு மைதானத்தில் இந்திய அணி வீரர்கள் பயிற்சிகளின் பயிற்சியில் ஈடுபட்டது குறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது 
 
விராட் கோலி ரோகித் சர்மா அஸ்வின், பும்ரா உள்ளிட்ட வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்ட புகைப்படங்களை கிரிக்கெட் ரசிகர்கள் ரசித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலிய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்திய இந்திய அணி இங்கிலாந்து அணியையும் வீழ்த்துமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கோலிக்கு கீழ் விளையாடும் போது பயப்படுகிறார்கள்…. ஆனால் ரஹானே? ஆஸ்திரேலிய வீரர் கருத்து!