அவுட் ஆகாமலே அவுட்டான ரோஹித் சர்மா? – ரசிகர்கள் கொந்தளிப்பு

Webdunia
வியாழன், 27 ஜூன் 2019 (18:23 IST)
இந்திய அணி வீரர் ரோஹித் சர்மா அவுட் ஆகாத நிலையில் அவருக்கு அவுட் கொடுத்து விட்டதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கோபமாக பதிவிட்டு வருகின்றனர்.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதி வருகின்றன. டாஸ் வென்று இந்தியா பேட்டிங் செய்து வரும் நிலையில் தொடக்க வீரரான ரோகித் ஷர்மா அதிகமான ரன்கள் எடுப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் 18 ரன்களில் அவுட் ஆனார். இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

விக்கெட் விழுந்ததும் நடுவர்கள் அது விக்கெட் இல்லை என்றே கூறினார்கள். இதனால் வெஸ்ட் இண்டீஸ் மூன்றாவது நடுவரை நாடியது. அதில் பந்து மட்டையில் உரசியபடி, பேடில் பட்டு போனது. எனினும் இதை மூன்றாவது நடுவர் விக்கெட் என அறிவித்தார். ஆனால் அது அவுட் இல்லை. நடுவர்கள் வெஸ்ட் இண்டீஸுக்கு துணைபோகிறார்கள் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கோபமாக பதிவிட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

358 ரன்கள் எடுத்தும் தோல்வி ஏன்? கேப்டன் கே.எல்.ராகுல் கூறும் காரணம்..!

அதிக சதமடித்து சாதனை: சச்சின் சாதனையை முறியடித்த விராத் கோஹ்லி..

கோஹ்லி, ருத்ராஜ் சதம் வீண்.. கடைசி ஓவரில் தென்னாப்பிரிக்கா த்ரில் வெற்றி..

கோலி, ருத்ராஜ் சதம்.. கே.எல்.ராகுல் அரைசதம்.. 350 ரன்களை தாண்டிய இலக்கு..!

ருத்ராஜ் அபார சதம்.. சதத்தை நெருங்கிய விராத் கோலி.. இந்தியாவின் ஸ்கோர் எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments