Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4வது டெஸ்ட் போட்டி.. இந்திய ஆஸ்திரேலிய பிரதமர் கலந்து கொள்வதால் பாதுகாப்பு அதிகரிப்பு..!

Webdunia
புதன், 8 மார்ச் 2023 (07:37 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நான்காவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நாளை தொடங்க இருப்பதை எடுத்து இந்த போட்டியை இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோணி அல்பான்ஸே ஆகிய இருவரும்  நேரில் பார்க்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன
 
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரில் இதுவரை மூன்று டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துள்ளன. இதில் இரண்டில் இந்திய அணியும் ஒன்றில் ஆஸ்திரேலியா அணியும் வென்று உள்ளது. 
 
இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை தொடங்க இருப்பதை அடுத்து இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா பிரதமர்கள் இந்த போட்டியை நேரில் பார்க்க உள்ளனர். 
 
இதனை அடுத்து அகமதாபாத் மைதானத்தில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த  போட்டியை பார்க்க வரும் பார்வையாளர்கள் தீவிர பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆசியக் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு எப்போது?

சிஎஸ்கே அணியிடம் இருந்து ‘அதை’தான் கேட்டுள்ளேன்… அஸ்வின் விளக்கம்!

100 கோடி நஷ்டஈடு வழக்கு! நீதிமன்றம் வர மறுத்த தோனி! - என்ன காரணம்?

மாநில டி 20 லீக்கில் இருந்து தடை செய்யப்பட்ட யாஷ் தயாள்!

என் உலகமே அவங்கதான்… எல்லா வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்த சஞ்சு சாம்சன்!

அடுத்த கட்டுரையில்
Show comments