Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இவர் மட்டும் இருந்தால் இந்தியா உலகக்கோப்பையை வென்றிருக்கும் – ரெய்னா சொல்லும் வீரர் யார்?

இவர் மட்டும் இருந்தால் இந்தியா உலகக்கோப்பையை வென்றிருக்கும் – ரெய்னா சொல்லும் வீரர் யார்?
, சனி, 22 ஆகஸ்ட் 2020 (16:35 IST)
அம்பாத்தி ராயுடு மற்றும் 2019 ஆம் ஆண்டு உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றிருந்தால் இந்தியா உலகக்கோப்பையை வென்றிருக்கும் என சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

2019 ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் முதலில் அம்பாத்தி ராயுடு இடம் பிடிக்கவில்லை. ஆனால் ஸ்டான்பை வீரராக அவர் நியமிக்கப்பட்டு இருந்தார். ஆனால் அணியில் இடம்பெற்றிருந்த விஜய் சங்கரின் முழங்கையில் ஏற்பட்ட காயத்தால் விலகியதால் அம்பாத்தி ராயுடுவுக்கு இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட் தேர்வு செய்யப்பட்டார். அதனால் அதிருப்தியடைந்த அம்பாத்தி ராயுடு இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து ஓய்வு பெற்றார்.

இப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அவர் விளையாட உள்ளார். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா ‘அம்பாத்தி ராயுடு நான்காவது இடத்துக்காக கடுமையாக உழைத்தார். ஆனால் அவருக்கு உலகக்கோப்பையில் இடம் கிடைக்காதது துரதிர்ஷ்டவசமானது. அவர் மட்டும் உலகக்கோப்பையில் இடம்பெற்றிருந்தால் இந்தியா கோப்பையை பெற்றிருக்கும்’ எனத் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எடுடா வண்டிய.. போடுடா விசில..! – அமீரகத்தில் சிஎஸ்கே மாஸ் எண்ட்ரி!