Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் – ஏமாற்றிய ரோஹித் ஷர்மா !

Webdunia
சனி, 22 ஜூன் 2019 (15:27 IST)
இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலானப் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட் செய்ய முடிவு எடுத்துள்ளது.

உலகக்கோப்பையின் 28 ஆவது போட்டியில் இன்று இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதி வருகின்றன. இதில் டாஸ் வென்ற இந்திய  அணி முதலில் பேட் செய்ய முடிவு செய்துள்ளது. இதையடுத்து தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் ஷர்மா மற்றும் கே எல் ராகுல் ஆகியோர் இறங்கினர். இந்தத் தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடிய ரோஹித் ஷர்மா ஒரு ரன்னில் அவுட்டாகி ஏமாற்றியுள்ளார். 6 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 18 ரன்களை சேர்த்துள்ளது.

இந்த உலகக் கோப்பைத் தொடரில் இதுவரை இந்தியா விளையாடிய 4 போட்டிகளில் மூன்று போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது. நியூஸிலாந்துடன் ஆட வேண்டிய ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டதால் புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன. அதேபோல ஆப்கானிஸ்தான் இதுவரை விளையாடியுள்ள 5 ஆட்டங்களில் ஒரு போட்டியில் கூட வெற்றிபெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

டாஸ் வென்ற சி எஸ் கே எடுத்த முடிவு… வாழ்வா சாவா போட்டியில் வெல்லப் போவது யார்?

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

பெங்களூரிவில் காலையிலிருந்து வெயில்… குஷியான ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

நானும் தோனியும் இணைந்து விளையாடுவது கடைசி முறையாக இருக்கலாம்… மனம் நெகிழ்ந்த கோலி!

ஐபிஎல் போட்டியில் விளையாட ஹர்திக் பாண்டியாவுக்கு தடை..! என்ன காரணம் தெரியுமா.?

அடுத்த கட்டுரையில்
Show comments