Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல் டி 20 போட்டியில் வெற்றி பெற்ற இந்தியா – கலக்கிய நடராஜன்!

Webdunia
வெள்ளி, 4 டிசம்பர் 2020 (17:30 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதல் டி 20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது டி 20 போட்டி இன்று கான்பெராவில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட் செய்த  இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணியைச் சேர்ந்த கே எல் ராகுல் 51 ரன்களும், ஜடேஜா 44 ரன்களும் அதிரடியாக சேர்த்தனர்.

இதையடுத்து 162 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய ஆஸ்திரேலிய அணி சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்து வந்தது. ஒரு கட்டத்தில் தமிழக வீரர் நடராஜன் மற்றும் சஹால் ஆகியவர்கள் சிறப்பாக பந்துவீசி தலா 3 விக்கெட்களைக் கைப்பற்றி வெற்றியை இந்தியா பக்கம் கொண்டு வந்தனர். இதையடுத்து 20 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன் மூலம் 11 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. தனது முதல் போட்டியிலேயே 3 விக்கெட்கள் எடுத்து நட்ராஜன் தனது முத்திரையை அழுத்தமாக பதித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெற்றி கொண்டாட்டத்தில் பலியானவர்களுக்கு இழப்பீடு! - RCB நிர்வாகம் அறிவிப்பு!

Free Ticket என கிளம்பிய வதந்தி..? ஆர்சிபி கொண்டாட்டத்தில் பலி போன 11 உயிர்கள்! - தப்பி பிழைத்தவர்கள் சொன்ன தகவல்!

ஐபிஎல் கோப்பைலாம் அதைவிட 5 மடங்கு கீழதான்.. நல்ல ப்ளேயரா வரணும்னா? - விராட் கோலி!

மீண்டும் வொர்க் அவுட் ஆனது ஹேசில்வுட்டின் இறுதிப் போட்டி அதிர்ஷ்டம்!

RCB அணி செல்லவிருந்த வீதியுலா கொண்டாட்டம் ரத்து… பின்னணி என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments