Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல் போட்டியிலேயே முத்திரை பதித்த நட்டு – 3 விக்கெட்களைக் கைப்பற்றி அபாரம்!

Webdunia
வெள்ளி, 4 டிசம்பர் 2020 (17:17 IST)
இந்திய அணியில் தேர்வாகி உள்ள நடராஜன் முதல் டி 20 போட்டியில் 3 விக்கெட்களை வீழ்த்தி முத்திரை பதித்துள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது டி 20 போட்டி இன்று கான்பெராவில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட் செய்த  இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்துள்ளது. இதனை அடுத்து 162 ரன்கள் என்ற இலக்கை நோக்கி தற்போது ஆஸ்திரேலிய அணி விளையாடி வருகிறது.

இந்திய அணி பவுலிங்கில் சிறப்பாக செயல்பட்டு கொண்டு இருக்கிறது. அதிலும் குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் தனது முதல் டி 20 போட்டியில் சிறப்பாக பந்துவீசி 3.1 ஓவர்களில் 22 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களைக் கைப்பற்றி அசத்தியுள்ளார். இதன் மூலம் அவர் இந்திய அணியை வெற்றிக்கு அருகில் கொண்டு சென்றுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments