Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

6 ஓவர்களில் முடிந்தது ஆட்டம்.. ஆசிய கோப்பை சாம்பியன் ஆனது இந்தியா..!

Advertiesment
இந்தியா
, ஞாயிறு, 17 செப்டம்பர் 2023 (18:10 IST)
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே இன்று ஆசிய கோப்பையின் இறுதிப்போட்டி நடைபெற்ற நிலையில் இந்த போட்டியில் 6 ஓவர்களில் இலக்கை எட்டி இந்திய அணி சாம்பியன் பட்டம் பெற்றது. 
 
இன்றைய போட்டி கடுமையாக இருக்கும் என்றும் இரு அணிகளும் வெற்றிக்காக போராடும் என்றும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்திய பந்துவீச்சாளர்களிடம் இலங்கை பேட்ஸ்மேன்கள் சரண்டர் ஆகினர்.
 
வெறும் 50 ரன்களுக்கு இலங்கை அணி ஆட்டம் இழந்த நிலையில் 51 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி பேட்டிங் செய்தது. சுப்மன் கில் 27 ரன்களும் இஷான் கிஷான் 23 ரன்களும் அடித்து 6.1 ஓவர்களில் இந்திய பேட்ஸ்மேன்கள் ஆட்டத்தை முடித்து விட்டனர். 
 
இதனை அடுத்து 10 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்ற இந்திய அணி ஆசிய கோப்பையின் சாம்பியன் பட்டம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

”வந்த எடம் என் காடு.. நீதான் பலி ஆடு..!” – வெறும் 50 ரன்களில் ஆட்டம் இழந்த இலங்கை!