Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலக துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா தங்கம் வென்று சாதனை

Webdunia
வெள்ளி, 7 செப்டம்பர் 2018 (09:39 IST)
ஜூனியர்களுக்கான உலக துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் சவுரப் சவுத்ரி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். 
தென்கொரியாவில் உள்ள சாங்வான் நகரில் உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி தற்பொழுது நடைபெற்று வருகிறது.
 
ஜூனியர் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர்பிஸ்டல் இறுதிப்போட்டியில் பங்குபெற்ற இந்திய வீரர் சவுரப் சவுத்ரி 245.5 புள்ளிகள் குவித்து தங்கப்பதக்கம் வென்றார். அத்தோடு முந்தைய உலக சாதனையான 243.7 புள்ளிகளை தகர்த்து 245.5 புள்ளிகள் பெற்று புதிய உலக சாதனை படைத்துள்ளார். இவர் உத்திரபிரதேசத்தை சேர்ந்தவர் ஆவார். 
 
சவுரப் சவுத்ரிக்கு  உத்திர பிரதேச மாநில அரசு பாராட்டுக்கள் தெரிவித்துள்ளது. மேலும் நாடெங்கிலிருந்தும் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments