Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலக துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா தங்கம் வென்று சாதனை

Webdunia
வெள்ளி, 7 செப்டம்பர் 2018 (09:39 IST)
ஜூனியர்களுக்கான உலக துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் சவுரப் சவுத்ரி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். 
தென்கொரியாவில் உள்ள சாங்வான் நகரில் உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி தற்பொழுது நடைபெற்று வருகிறது.
 
ஜூனியர் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர்பிஸ்டல் இறுதிப்போட்டியில் பங்குபெற்ற இந்திய வீரர் சவுரப் சவுத்ரி 245.5 புள்ளிகள் குவித்து தங்கப்பதக்கம் வென்றார். அத்தோடு முந்தைய உலக சாதனையான 243.7 புள்ளிகளை தகர்த்து 245.5 புள்ளிகள் பெற்று புதிய உலக சாதனை படைத்துள்ளார். இவர் உத்திரபிரதேசத்தை சேர்ந்தவர் ஆவார். 
 
சவுரப் சவுத்ரிக்கு  உத்திர பிரதேச மாநில அரசு பாராட்டுக்கள் தெரிவித்துள்ளது. மேலும் நாடெங்கிலிருந்தும் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

220 ரன்கள் இலக்கு கொடுத்த பஞ்சாப்.. ராஜஸ்தான் இலக்கை எட்டுமா?

தோனிக்கு சேர்ந்த கூட்டம் தானாகவே சேர்ந்தது: ஹர்பஜன் சிங்

விராத் கோலிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்.. சுரேஷ் ரெய்னா கோரிக்கை..!

ஐபிஎல் மீண்டும் தொடங்கினாலும், மழை தொடங்கவிடவில்லை.. RCB - KKR போட்டி ரத்து

மழையால் பாதிக்கப்படுமா இன்றைய ஐபிஎல் போட்டி… முதல் அணியாக ப்ளே ஆஃப்க்கு செல்லும் RCB?

அடுத்த கட்டுரையில்
Show comments