Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வழக்கம் போல் இந்தியாவிடம் மண்ணை கவ்விய பாகிஸ்தான்: 125 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி

வழக்கம் போல் இந்தியாவிடம் மண்ணை கவ்விய பாகிஸ்தான்:  125 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி
, ஞாயிறு, 4 ஜூன் 2017 (23:05 IST)
உலக கோப்பை போட்டிகள் உள்பட சமீபகாலமாக நடந்த ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவிடம் மண்ணை கவ்வுவது பாகிஸ்தானுக்கு ஒன்றும் புதிதில்லை. அந்த வகையில் இன்று நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை போட்டியிலும் பாகிஸ்தான் படுதோல்வி அடைந்தது.



 


இந்தியா போன்ற வலிமையான அணியுடன் விளையாடும் பாகிஸ்தான் டாஸ்  வென்றும் பந்துவீச்சை தேர்வை செய்தபோதே அதன் தோல்வி உறுதியாகிவிட்டது. இந்த அணியின் அபார பேட்டிங்கால் 48 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 319 ரன்கள் எடுத்தது.

ஆனால் மழை குறுக்கிட்டதால் பாகிஸ்தானுக்கு 41 ஓவர்களில் 289 என்ற இலக்கு கொடுக்கப்பட்டது. ஆனால் இந்திய அணியினர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் அணி 33.4 ஓவர்களில் வெறும் 164 ரன்கள் மட்டுமே எடுத்து 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது., இந்த வெற்றியை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஐசிசி சாம்பியன்ஷிப் போட்டி: பாகிஸ்தானின் வெற்றி இலக்கில் திடீர் மாற்றம்