Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்திய அணி வெற்றி: சமநிலையில் இரு அணிகள்...

இந்திய அணி வெற்றி: சமநிலையில் இரு அணிகள்...
, புதன், 25 அக்டோபர் 2017 (21:23 IST)
இன்று இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி புனேயில் நடைபெற்றது. இதில் இந்திய அணி வெற்றி பெற்றது.


 
 
இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 9  விக்கெட் இழப்புக்கு 230 ரன்கள் குவித்தது.
 
மும்பையில் நடந்த முதலாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. 
 
எட்டக்கூடிய இலக்கை துரத்திய இந்திய அணியை ரோகித் சர்மா, கோலி ஏமாற்றினர். தவான், பாண்டியா, தினேஷ் கார்த்திக், தோனி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
 
இதையடுத்து இந்திய அணி, 46 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 232 ரன்கள் 6 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி, 1-1 என சமன் செய்தது.
 
இரு அணிகள் மோதும் மூன்றாவது ஒருநாள் போட்டி, வரும் 29 ஆம் தேதி கான்பூரில் நடக்கவுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கோலிக்கு திருமணம்: போட்டியில் இருந்து ஓய்வு இதற்குதானா...