Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா ஈசியா கப் அடிக்கும்… ஆஸி கேப்டன் கருத்து!

Webdunia
செவ்வாய், 15 ஜூன் 2021 (10:00 IST)
இங்கிலாந்தில் நடக்க உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை இந்தியா எளிதாக வெல்லும் என ஆஸி கேப்டன் டிம் பெய்ன் தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு வருடங்களாக நடந்து வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் முதல் இரண்டு இடங்களில் உள்ள இந்தியா மற்றும் நியுசிலாந்து ஆகிய அணிகள் மோத உள்ளன. உலகின் புகழ் பெற்ற மைதானமான இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் இந்த தொடர் நடக்க உள்ளது. இந்த போட்டி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்துடன் நடந்த இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை நியுசிலாந்து அணி வென்றிருப்பது அந்த அணிக்கு மேலும் பலத்தை கொடுத்துள்ளது. இதனால் நியுசியை எதிர்கொள்வது சவாலானதாக இருக்கும் எனப் பலரும் கூறிவருகின்றனர். இந்நிலையில் இப்போது ஆஸி டெஸ்ட் அணியின் கேப்டன் டிம் பெய்ன் ‘இந்தியா மட்டும் அவர்களின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விட்டால் எளிதாக போட்டியை வென்றுவிடும்’ எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

டி-20 உலகக் கோப்பை தொடர்..! தூதராக யுவராஜ் சிங் நியமனம்.!!

தவறு என்ன என்று உக்காந்து யோசிக்கவேண்டும்… கே கே ஆர் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்!

யாராவது பவுலர்களைக் காப்பாற்றுங்கள் ப்ளீஸ்… கதறிய ரவிச்சந்திரன் அஸ்வின்!

“ரிஸ்க் எடுத்துதான் ஆகணும்… அவரு என்னா அடி அடிக்குறாரு” வெற்றிக்குப் பின்னர் பேசிய ஆட்டநாயகன் பேர்ஸ்டோ!

போன தடவ 900 ரன்கள் அடித்தேன்… அப்பயே என்ன டி 20 உலகக் கோப்பைல எடுக்கல- புலம்பித் தள்ளிய ஷுப்மன் கில்

அடுத்த கட்டுரையில்
Show comments