Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவின் பீலடிங் குறித்து யுவராஜ் பரபரப்பு ட்வீட்

Webdunia
வெள்ளி, 6 டிசம்பர் 2019 (21:23 IST)
இந்திய மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இந்தியாவின் மோசமான ஃபீல்டிங்கால் முதலில் பேட்டிங் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்தனர்.
 
லீவீஸ் 40 ரன்களும், ஹெட்மயர் 56 ரன்களும், பொல்லார்டு 37 ரன்களும், கிங் 31 ரன்களும் எடுத்தனர். கடைசி நேரத்தில் களமிறங்கிய ஹோல்டர் அதிரடியாக விளையாடி 9 பந்துகளில் 24 ரன்கள் குவித்தார். இதில் இரண்டு சிக்ஸர்கள் ஒரு பவுண்டரியும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் 208 என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடி வரும் இந்தியா தற்போது 8 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 76 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் சர்மா 8 ரன்களில் அவுட் ஆனபோதிலும், கே.எல்ராகுல் 38 ரன்கள் எடுத்தும், கேப்டன் விராத் கோஹ்லி 17 ரன்கள் எடுத்தும் களத்தில் உள்ளனர்.
 
இதுகுறித்து யுவராஜ் சிங் கூறிதாவது: இன்றைய ஆட்டத்தில் இந்தியாவின் பீலடிங் மிகவும் மோசமானதாக இருந்தது, இளம் வீரர்கள் பந்தை சற்று தாமதமாக எதிர்வினையாற்றுகின்றனர்! என்று கூறியுள்ளார். பீல்டிங்கில் கோட்டை விட்டாலும் இந்தியாவின் பேட்டிங் மிகவும் பலமாக இருப்பதால் இந்த இமாலய இலக்கை அடையும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

“தொடர்ந்து நான்காவது தோல்வி… வீரர்கள் அதை ஒப்புக்கொள்ள வேண்டும்” – சஞ்சு கேப்டன் ஆதங்கம்!

சி எஸ் கே அணியை விட்டு விலகுகிறாரா ஸ்டீபன் பிளமிங்? காசி விஸ்வநாதன் பதில்!

கேப்டன் சாம் கர்ரன் அபார பேட்டிங்.. பஞ்சாப் அணிக்கு ஆறுதல் வெற்றி..!

வலுவான ராஜஸ்தானை எதிர்கொள்ளும் முன்னணி வீரர்கள் இல்லாத பஞ்சாப்… டாஸ் அப்டேட்!

சிறுமி வன்கொடுமை வழக்கு.. நிரபராதியான சந்தீப் லமிச்சேனே! – உலகக்கோப்பையில் நடக்கும் அதிரடி மாற்றம்!

அடுத்த கட்டுரையில்
Show comments