Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்தியா-தென்னாப்பிரிக்கா போட்டி மழையால் ரத்து: தொடரை வென்றது யார்?

5th t20
, ஞாயிறு, 19 ஜூன் 2022 (22:09 IST)
இந்தியா-தென்னாப்பிரிக்கா போட்டி மழையால் ரத்து: தொடரை வென்றது யார்?
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்ற ஐந்தாவது டி20 கிரிக்கெட் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. 
 
தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.  இந்திய அணி 3.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 28 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது.
 
அதன்பிறகு மழை விடவே இல்லை என்பதால் போட்டி ரத்து செய்யப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர். இந்த தொடரில் இரு அணிகளும் தலா இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளதை அடுத்து தொடர் சமனில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.
 
 இன்றைய போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டதால் கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

5வது டி20 போட்டி: டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா எடுத்த அதிரடி முடிவு!