Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மைதானத்தில் லேசான தூறல்: இந்தியா-நியூசிலாந்து போட்டி நடக்குமா?

Webdunia
செவ்வாய், 22 நவம்பர் 2022 (11:40 IST)
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே இன்று மூன்றாவது மற்றும் இறுதி டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற இருந்த நிலையில் மைதானத்தில் லேசான தூறல் விழுந்து கொண்டிருப்பதால் டாஸ் போடுவது ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன
 
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்ட நிலையில் இரண்டாவது போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது
 
இந்த நிலையில் இந்திய நேரப்படி இன்று காலை 11:30 மணிக்கு மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டி தொடங்க இருந்த நிலையில் திடீரென மைதானத்தில் லேசான சாரல் விழுந்தது
 
இதனை அடுத்து வருவது சில நிமிடங்கள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இன்று பெரிய அளவில் மழை இருக்காது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது இந்த போட்டியை நடைபெறும் என்றும் நடுவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

டி-20 உலகக் கோப்பை தொடர்..! தூதராக யுவராஜ் சிங் நியமனம்.!!

தவறு என்ன என்று உக்காந்து யோசிக்கவேண்டும்… கே கே ஆர் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்!

யாராவது பவுலர்களைக் காப்பாற்றுங்கள் ப்ளீஸ்… கதறிய ரவிச்சந்திரன் அஸ்வின்!

“ரிஸ்க் எடுத்துதான் ஆகணும்… அவரு என்னா அடி அடிக்குறாரு” வெற்றிக்குப் பின்னர் பேசிய ஆட்டநாயகன் பேர்ஸ்டோ!

போன தடவ 900 ரன்கள் அடித்தேன்… அப்பயே என்ன டி 20 உலகக் கோப்பைல எடுக்கல- புலம்பித் தள்ளிய ஷுப்மன் கில்

அடுத்த கட்டுரையில்
Show comments