Webdunia - Bharat's app for daily news and videos

Install App

94க்கு 7 விக்கெட்.. ஒரே நம்பிக்கை நட்சத்திரம் ஜடேஜா.. தோல்வியை தவிர்க்குமா இந்தியா?

Mahendran
திங்கள், 14 ஜூலை 2025 (16:38 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் ஐந்தாவது நாளான இன்று, இந்திய அணி 94 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது. இங்கிலாந்தின் ஆர்ச்சர், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் அபாரமாக பந்துவீசி இந்திய விக்கெட்டுகளை வீழ்த்தி வருகின்றனர்.
 
முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 387 ரன்கள் அடித்த நிலையில், இந்தியாவும் முதல் இன்னிங்ஸில் 387 ரன்கள் அடித்து சமன் செய்தது. இதனை அடுத்து, இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து களமிறங்கி 192 ரன்கள் எடுத்தது. 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸில் வெற்றி இலக்கை நோக்கி ஆடிய இந்தியாவுக்கு ஆரம்பமே அதிர்ச்சி. ஜெய்ஸ்வால், டக் அவுட் ஆக, கேப்டன் கில் 6 ரம்ல:ஒ; அவுட்டானார். அதன் பிறகு கேப்டன் கே.எல். ராகுல், ரிஷப் பண்ட், வாஷிங்டன் சுந்தர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 
 
இந்த நிலையில், தற்போது ஜடேஜா 12 ரன்களுடன் விளையாடி வருகிறார். களத்தில் இருக்கும் ஒரே பேட்ஸ்மேன் அவர்தான் என்பதால், அவர் மட்டுமே நம்பிக்கை நட்சத்திரமாக இந்திய ரசிகர்களால் பார்க்கப்படுகிறார். அவர் இந்த போட்டியை வென்று கொடுப்பாரா அல்லது டிரா செய்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

94க்கு 7 விக்கெட்.. ஒரே நம்பிக்கை நட்சத்திரம் ஜடேஜா.. தோல்வியை தவிர்க்குமா இந்தியா?

பென் டக்கட் விக்கெட் விழுந்ததும் ஆவேசம்.. முகமது சிராஜுக்கு அபராதம்: ஐ.சி.சி. அறிவிப்பு.!

பி.பி.எல்2 : வில்லியனூர் அணி அதிரடி ஆட்டம்; ஊசுடு அணியை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது

அவ்ளோ வெறி மாப்பிள்ளைக்கு..! விக்கெட்டை வீழ்த்தி டக்கெட்டை சீண்டிய சிராஜ்! அபராதம் விதிக்கப்படுமா?

நைட் வாட்ச்மேனை பலிகொடுத்த கே எல் ராகுல்… சரியா தவறா?- ரசிகர்கள் காரசார விவாதம்!

அடுத்த கட்டுரையில்
Show comments