Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒருநாள் போட்டி போல் அடித்து விளையாடும் இங்கிலாந்து.. வெற்றியை நோக்கி செல்கிறதா?

Siva
செவ்வாய், 24 ஜூன் 2025 (18:01 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் கடைசி நாளான இன்று, இங்கிலாந்து அணி வெற்றி இலக்கை எட்டுவதற்காக ஒருநாள் போட்டி போல் அதிரடியாக விளையாடி வருகிறது. இதனால், அந்த அணி வெற்றியை நெருங்கி விடுமோ என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
 
முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 471 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 364 ரன்களும் எடுத்திருந்தது. இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 465 ரன்கள் எடுத்திருந்ததால், இரண்டாவது இன்னிங்ஸில் வெற்றி பெற 371 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் களமிறங்கி விளையாடி வருகிறது.
 
தற்போது இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 117 ரன்கள் எடுத்துள்ள நிலையில், இன்னும் 254 ரன்கள் மட்டுமே எடுக்க வேண்டியுள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களான க்ராளி (Crawley) மற்றும் டக்வெட் (Duckett) இருவரும் ஒருநாள் போட்டி பாணியில் அடித்து விளையாடி வருகின்றனர். க்ராளி 42 ரன்களும், டக்வெட் 64 ரன்களும் எடுத்துள்ளனர்.
 
10 விக்கெட்டுகளும் கையில் இருக்கும் நிலையில், மீதமுள்ள ஓவர்களில் இங்கிலாந்து அணி இதே அதிரடியான ஆட்டத்தை தொடர்ந்தால், வெற்றிக்கு தேவையான இலக்கை எட்ட வாய்ப்பிருப்பதாக கிரிக்கெட் வர்ணனையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிரா செய்யும் நோக்கில் விளையாட மாட்டோம்… இங்கிலாந்து வீரர் நம்பிக்கை!

350 ரன்களுக்கு மேல் இலக்கு வைத்து இந்தியா பெற்ற வெற்றி தோல்விகள் எத்தனை?

இந்திய அணியின் டெஸ்ட் வரலாற்றில் எந்த பேட்ஸ்மேனும் படைக்காத சாதனை… பல்டி நாயகன் ரிஷப் பண்ட்டின் வாழ்நாள் இன்னிங்ஸ்!

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல்முறையாக இந்தியா செய்த சாதனை.. இன்றைய கடைசி நாளில் என்ன ஆகும்?

சதத்தை நெருங்கும் கே.எல்.ராகுல்.. டிராவை நோக்கி இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments