Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டிரா செய்யும் நோக்கில் விளையாட மாட்டோம்… இங்கிலாந்து வீரர் நம்பிக்கை!

Advertiesment
இந்தியா

vinoth

, செவ்வாய், 24 ஜூன் 2025 (14:17 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஹெட்டிங்லிவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த போட்டியில்  முதல் இன்னிங்ஸில் 471 ரன்கள் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் 465 ரன்கள் இந்திய அணி எடுத்துள்ளது. இந்திய வீரர்களான ஷுப்மன் கில், ஜெய்ஸ்வால், கே எல் ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் சதமடித்து அசத்தினர்.

இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 364 ரன்கள் சேர்த்தது. இதனால் இங்கிலாந்து அணிக்கு இலக்காக 371 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நேற்று நான்காம் நாளில் இங்கிலாந்து அணி 21 ரன்கள் சேர்த்து ஆட்டத்தை நிறைவு செய்தது. இதனால் ஐந்தாம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணிக்கு 350 ரன்கள் தேவையாக உள்ளது. கையில் 10 விக்கெட் இருந்தாலும் இங்கிலாந்து அணி டிரா செய்யவே முயற்சி செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இங்கிலாந்து அணி வீரர் ஜோஷ் டங் நேற்று பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசிய போது போட்டியை டிரா செய்யும் நோக்கோடு விளையாட மாட்டோம் எனப் பேசியுள்ளார். அதில் “நாங்கள் வெற்றியை நோக்கிதான் செல்வோம். இந்த செய்தி எங்கள் ஓய்வறையில் தெளிவாக சொல்லப்பட்டது.  நாங்கள் மிகவும் பாசிட்டிவ்வாக இருக்க விரும்புகிறோம். இந்திய பவுலர்கள் சிறப்பாக பந்துவீசுவார்கள். ஆனால் அவர்களை எதிர்கொண்டு திருப்பிக் கொடுப்பதில்தான் எங்கள் வெற்றி உள்ளது.  இதை ஏன் எங்களால் செய்ய முடியாது?” என நம்பிக்கையோடு பேசியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

350 ரன்களுக்கு மேல் இலக்கு வைத்து இந்தியா பெற்ற வெற்றி தோல்விகள் எத்தனை?