Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சதத்தை மிஸ் செய்த கே.எல்.ராகுல்.. சதத்தை நோக்கி கில்.. டிரா செய்யுமா இந்தியா?

Siva
ஞாயிறு, 27 ஜூலை 2025 (16:30 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்திய அணியின் நட்சத்திர வீரர் கே.எல். ராகுல் 90 ரன்கள் எடுத்த நிலையில் சதத்தை நூலிழையில் தவறவிட்டார். மறுமுனையில், இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் 90 ரன்களுடன் சதத்தை நோக்கி விளையாடி வருகிறார், இன்னும் சில நிமிடங்களில் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
தற்போதைய நிலவரப்படி, இந்திய அணி 75 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா இன்னும் 118 ரன்கள் பின்தங்கி உள்ளது.
 
இன்றைய நாள் முழுவதும் இந்திய பேட்ஸ்மேன்கள் விக்கெட் இழப்பின்றி நிலைத்து நின்று விளையாடினால், இந்த போட்டியை டிரா செய்ய முடியும். எனவே, போட்டியை டிரா செய்ய இந்திய பேட்ஸ்மேன்கள் கடுமையாக போராடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இங்கிலாந்து தரப்பில், கிறிஸ் வோக்ஸ் 2 விக்கெட்டுகளையும், பென் ஸ்டோக்ஸ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சதத்தை மிஸ் செய்த கே.எல்.ராகுல்.. சதத்தை நோக்கி கில்.. டிரா செய்யுமா இந்தியா?

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்தியா - பாகிஸ்தான் போட்டி எப்போது?

முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டை இழந்த இந்தியா.. சுதாரித்து விளையாடும் கே.எல்.ராகுல், கில்..!

ஜோ ரூட் 150, பென் ஸ்டோக்ஸ் 141.. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து இமாலய ஸ்கோர்..!

பும்ரா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறலாம்: முன்னாள் வீரர் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments