Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி போட்டி.. ரவிசாஸ்திரியின் இந்திய லெவன் அணி..!

Advertiesment
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி போட்டி.. ரவிசாஸ்திரியின் இந்திய லெவன் அணி..!

Mahendran

, திங்கள், 3 மார்ச் 2025 (14:40 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதி போட்டியில் மோத உள்ள நிலையில், இந்த போட்டிக்கான இந்திய அணி எப்படி இருக்க வேண்டும் என்று தனது கருத்தை ரவி சாஸ்திரி கூறியுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
 
ரோகித் சர்மா கேப்டனாக இருக்கும் இந்திய அணியில், சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், அக்சர் பட்டேல், கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது ஷமி மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
 
அதாவது, நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடிய அணி அப்படியே அரையிறுதி போட்டியிலும் விளையாட வேண்டும் என்றும் எந்த வித மாற்றமும் இல்லாமல் இந்த வீரர்கள் அணியில் இடம் பெற்றிருந்தால் கண்டிப்பாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற வாய்ப்பு உண்டு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் வருண் சக்கரவர்த்தி அபாரமாக பந்துவீசி ஐந்து விக்கெட்டுகளை எடுத்துள்ளதால், அவர் கண்டிப்பாக அரையிறுதி போட்டியிலும், இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றால், இறுதிப் போட்டியிலும் இடம் பெறுவார் என்று கூறப்படுகிறது.

Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முதல் நாளிரவுதான் எனக்கு மெஸேஜ் வந்தது.. ஆட்டநாயகன் வருண் சக்ரவர்த்தி!