Webdunia - Bharat's app for daily news and videos

Install App

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்னையில் இந்தியா-ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டி: தொடரை வெல்வது யார்?

chepauk
புதன், 22 மார்ச் 2023 (07:51 IST)
சென்னையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற இருக்கும் நிலையில் இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை வெல்லும் அணி என்பதால் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே நடைபெற்ற இரு அணிகளுக்கு இடையிலான இரண்டு ஒருநாள் போட்டிகளில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் தலா ஒரு வெற்றிப் பெற்றுள்ளன. இந்த நிலையில் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற இருக்கும் நிலையில் ரசிகர்கள் நீண்ட இடைவெளிக்கு பின்னர் போட்டியை நேரடியாக பார்க்க ஆர்வம் கொண்டுள்ளனர். 
 
சென்னை கிரிக்கெட் போட்டிக்காக அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாகவும் மெட்ரோ ரயில்கள் சிறப்பு ரயில்களை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. 
 
மேலும் அரசினர் தோட்டத்திலிருந்து சேப்பாக்கம் மைதானம் வரை செல்வதற்கு இலவச பேருந்துகளையும் மெட்ரோ நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பல ஆண்டுகளுக்கு பின்னர் சென்னையில் கிரிக்கெட் போட்டி நடைபெறுவதால் சென்னை கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கடைசி போட்டியிலும் பெங்களூருக்கு தோல்வி: மும்பை அணி அபார வெற்றி..!