Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஏமாற்றிய ராகுல் & கோஹ்லி – இந்தியா நிதான ஆட்டம் !

ஏமாற்றிய ராகுல் & கோஹ்லி – இந்தியா நிதான ஆட்டம் !
, ஞாயிறு, 15 டிசம்பர் 2019 (14:46 IST)
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி நிதானமாக விளையாடி வருகிறது.

மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது என்பது தெரிந்ததே. ஏற்கனவே நடைபெற்று முடிந்த டி 20 தொடருக்குப் பின் ஒருநாள் போட்டி தொடர் இன்று சென்னையில் நடக்கிறது.

இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் கே எல் ராகுல் 6 ரன்களிலும் கேப்டன் கோஹ்லி 4 ரன்களிலும் அவுட் ஆகி ஏமாற்றமளித்தனர். அதன் பின் களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர், ரோஹித் ஷர்மாவுடன் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடி வருகிறார்.

சற்று முன்பு வரை ஸ்ரேயாஸ் ஐயர் 22 ரன்களுடனும் ரோஹித் ஷர்மா 33 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா 73 ரன்களுக்கு 2 விக்கெட்கள் இழந்து விளையாடி வருகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி: பொல்லார்டு எடுத்த அதிர்ச்சி முடிவு