5 சதங்கள் அடித்தும் தோல்வி.. இந்தியாவின் மோசமான உலக சாதனை..!

Siva
புதன், 25 ஜூன் 2025 (07:25 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில், ஒரு டெஸ்ட் போட்டியில் ஐந்து சதங்கள் அடித்தும் தோல்வி அடைந்த அணி என்ற மோசமான சாதனையை இந்தியா படைத்துள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட் மற்றும் சுப்மன் கில்  ஆகிய மூவரும் சதம் அடித்தனர். இதனை தொடர்ந்து, இரண்டாவது இன்னிங்ஸில் கே.எல். ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் மீண்டும் சதம் அடித்தனர். இதில், ரிஷப் பண்ட் இரு இன்னிங்ஸ்களிலும் சதம் விளாசியது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில், ஒரே போட்டியில் ஐந்து சதங்கள் அடித்தும் இந்திய அணி தோல்வியடைந்தது, 148 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக நடந்த ஒரு மோசமான சாதனையாக கருதப்படுகிறது. 
 
இதற்கு முன், 1928-29 ஆம் ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி விளையாடியபோது நான்கு சதங்கள் அடித்து தோல்வியடைந்ததுதான் இதுவரை மோசமான சாதனையாக இருந்தது. ஆனால், தற்போது 5 சதங்கள் அடித்தும் தோல்வி என்ற மோசமான வரலாற்று சாதனையை இந்தியா படைத்துள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடுவரை விரட்டி விரட்டி அடித்த வீரர்கள்.. கலவர பூமியான பாகிஸ்தான் மைதானம்..

கிரிக்கெட்டை தவிர வேறு எதுவும் வேண்டாம்.. திருமண ரத்துக்கு பிறகு மனம் திறந்த ஸ்மிருதி மந்தனா..

பாகிஸ்தானுக்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியை அனுப்பலாமா? பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு..!

மூன்று ஃபார்மட்டுகளிலும் 100 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரர்.. பும்ராவுக்கு குவியும் வாழ்த்துக்கள்..!

தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டி.. 102 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments