ஆரம்பமே அதிர்ச்சி; 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் இந்தியா

Webdunia
புதன், 24 ஜனவரி 2018 (14:26 IST)
தென் ஆப்பரிக்கா - இந்தியா அணிகள் இடையே நடைபெறும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஆரம்பத்திலேயே 2 விக்கெட்டை இழந்து தடுமாறி வருகிறது.

 
இந்திய அணி தென் ஆப்பரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 6 ஒருநாள், 3டி20 ஆகிய போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிரது. தற்போது டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முத; இரண்டு போட்டிகளில் இந்திய அணி தோல்வி அடைந்தது. 
 
இதன்மூலம் தென் ஆப்பரிக்க அணி டெஸ்ட் தொடரை வென்றது. மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று ஜோகன்னஸ்பர்கில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது.
 
அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி ஆரம்பத்திலேயே இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. தொடக்க வீரர்களான விஜய் 8 ரன்களுடனும், ராகுல் ரன் ஏதும் எடுக்காமலும் மைதானத்தை விட்டு வெளியேறினர். தற்போது இந்திய அணியின் கேப்டன் கோலி மற்றும் புஜாரா களத்தில் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

124 ரன்கள் இலக்கை எட்ட முடியாமல் தோல்வி அடைந்த இந்தியா.. ரசிகர்கள் ஏமாற்றம்..!

2வது இன்னிங்ஸிலும் 153 ரன்களுக்கு தென்னாப்பிரிக்கா ஆல்-அவுட்.. இந்தியாவுக்கு டார்கெட் எவ்வளவு?

முதல் டெஸ்ட்டில் இருந்து ஷுப்மன் கில் திடீர் விலகல்: கேப்டன் யார்?

ஜடேஜா விருப்பப்பட்டு தான் எங்கள் அணிக்கு வந்தார்: ராஜஸ்தான் அணி உரிமையாளர்..!

சஞ்சு வந்தாச்சு… அப்போ அடுத்த சீசன்தான் ‘one last time’-ஆ… ரசிகர்கள் சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments