Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

32 ரன்கள் முன்னிலையில் இந்தியா: ஆஸி.யின் ஆதிக்கம் தொடருமா?

32 ரன்கள் முன்னிலையில் இந்தியா: ஆஸி.யின் ஆதிக்கம் தொடருமா?
, திங்கள், 27 மார்ச் 2017 (12:10 IST)
இந்தியா - ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இந்தியாவில் நடைப்பெற்று வருகின்றது. 


 
 
3 போட்டிகள் முடிவில் இந்தியா- ஆஸ்திரேலியா தலா 1 போட்டிகளில் வெற்றி பெற்று 1-1 என சமநிலையில் உள்ளன. மூன்றாவது டெஸ்ட் டிராவில் முடிந்தது.
 
4 வது போட்டி தர்மசாலாவில் நடைப்பெற்று வருகின்றது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 300 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 
 
இதன் பிறகு களமிறங்கிய இந்தியாவுக்கு ராகுல் 60, புஜாரா 57, ரஹானே 46, அஸ்வின் 30 ரன்கள் எடுத்து வலுசேர்த்தனர். 
 
பின்னர் ஜடேஜா, சஹா ஜோடி சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்து இந்தியாவை முன்னிலை பெறசெய்தனர். ஜடேஜா அரைசதம் கடந்து 63 ரன்களும், சஹா 31 ரன்களும் எடுத்து அவுட்டாகி வெளியேறினர்.
 
அடுத்து களமிறங்கிய இந்திய வீரர்கள் நிலைத்து நிற்காமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால் இந்திய அணி 32 ரன்கள் முன்னிலை பெற்று ஆட்டமிழந்தது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியா 248 ரன்னுக்கு 6 விக்கெட்: முன்னிலை பெற போராட்டம்!