Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒரு முறை கூட டாஸ் வெல்லாத நியூசிலாந்து!!

Advertiesment
இந்தியா-நியூசிலாந்து
, ஞாயிறு, 23 அக்டோபர் 2016 (14:48 IST)
இந்தியா - நியூசிலாந்து அணிகள் பங்கேற்கும் 3வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்ந்தெடுத்துள்ளது.

 
5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க இந்தியா வந்துள்ளது நியூசிலாந்து அணி, முதல் 2 போட்டிகளில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
 
இன்று 3வது ஒருநாள் போட்டி பஞ்சாப் மாநிலம், மொஹாலியில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்ந்தெடுத்துள்ளார். கடந்த இரண்டு போட்டிகளில் விளையாடிய அதே வீரர்களே இந்திய அணியில் மீண்டும் களமிறங்குகின்றனர்.
 
முன்னதாக நடந்த 3 டெஸ்ட் மற்றும் 2 ஒரு நாள் போட்டிகளில் ஒன்றில் கூட நியூசிலாந்து அணி டாஸ் வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

3-வது ஒரு நாள் போட்டி: வெற்றியை சுவைக்குமா இந்தியா??