Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹர்திக் அபாரம்: ஆஸ்திரேலியாவுக்கு 303 இலக்கு கொடுத்த இந்தியா!

Webdunia
புதன், 2 டிசம்பர் 2020 (12:44 IST)
ஹர்திக் அபாரம்: ஆஸ்திரேலியாவுக்கு 303 இலக்கு கொடுத்த இந்தியா!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்று வரும் 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு 303 என்ற இலக்கை இந்திய அணி கொடுத்துள்ளது 
 
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராத் கோலியின் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். இதனை அடுத்து தவான் மற்றும் கில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இதில் தவான் 16 ரன்களிலும் கில் 33 ரன்களில் அவுட் ஆகிய நிலையில் கேப்டன் விராத் கோலி அருமையாக 63 ரன்கள் அடித்தார் 
 
இதன்பின் ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் கேஎல் ராகுல் ஆகிய இருவரும் சொதப்பிய நிலையில் ஹர்திக் பாண்டியா மற்றும் ஜடேஜா ஆகிய இருவரும் அபாரமாக ஆடினார்கள். பாண்டியா 92 ரன்களும் ஜடேஜா 66 ரன்கள் எடுத்து இருவரும் அவுட் ஆகாமல் களத்தில் நின்றனர் 
 
இதனையடுத்து இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் சில நிமிடங்களில் ஆஸ்திரேலிய அணியை 303 என்ற இலக்கை நோக்கி விளையாட உள்ளது என்பதும் இந்த இலக்கை ஆஸ்திரேலிய அணி எட்டுமா? நடராஜன் பந்து வீச்சை சமாளிக்குமா என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலயின் ஹெலிகாப்டர் ஷாட் பாக்க ரெடியா? சென்னையில் 7 மேட்ச்..! வெளியானது IPL 2025 அட்டவணை!

கிரிக்கெட்டில் முதல்ல சூப்பர் ஸ்டார் கலாச்சாரத்தை ஒழிக்கணும்..? - ரவிச்சந்திரன் அஷ்வின் அதிரடி!

மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட்.. பலம் வாய்ந்த மும்பை அதிர்ச்சி தோல்வி.. டெல்லி அபார வெற்றி..!

பும்ரா இல்லைன்னா என்ன?... சாம்பியன்ஸ் கோப்பை தொடர் குறித்து கபில் தேவ் கருத்து!

தோனியின் கண்களைப் பார்த்தால் நடுங்குவோம்.. ஷிகார் தவான் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments