Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹர்திக் அபாரம்: ஆஸ்திரேலியாவுக்கு 303 இலக்கு கொடுத்த இந்தியா!

Webdunia
புதன், 2 டிசம்பர் 2020 (12:44 IST)
ஹர்திக் அபாரம்: ஆஸ்திரேலியாவுக்கு 303 இலக்கு கொடுத்த இந்தியா!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்று வரும் 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு 303 என்ற இலக்கை இந்திய அணி கொடுத்துள்ளது 
 
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராத் கோலியின் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். இதனை அடுத்து தவான் மற்றும் கில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இதில் தவான் 16 ரன்களிலும் கில் 33 ரன்களில் அவுட் ஆகிய நிலையில் கேப்டன் விராத் கோலி அருமையாக 63 ரன்கள் அடித்தார் 
 
இதன்பின் ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் கேஎல் ராகுல் ஆகிய இருவரும் சொதப்பிய நிலையில் ஹர்திக் பாண்டியா மற்றும் ஜடேஜா ஆகிய இருவரும் அபாரமாக ஆடினார்கள். பாண்டியா 92 ரன்களும் ஜடேஜா 66 ரன்கள் எடுத்து இருவரும் அவுட் ஆகாமல் களத்தில் நின்றனர் 
 
இதனையடுத்து இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் சில நிமிடங்களில் ஆஸ்திரேலிய அணியை 303 என்ற இலக்கை நோக்கி விளையாட உள்ளது என்பதும் இந்த இலக்கை ஆஸ்திரேலிய அணி எட்டுமா? நடராஜன் பந்து வீச்சை சமாளிக்குமா என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜிம்மில் ஏற்பட்ட காயம்… மீதமுள்ள போட்டிகளில் இருந்தும் விலகும் இந்திய வீரர்!

சாம்பியன்ஸ் லீக் தொடர் மீண்டும் தொடங்குவது எப்போது?..ஐசிசி கூட்டத்தில் ஆலோசனை!

டி 20 கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த ஜோஸ் பட்லர்!

கம்பீருக்கு ஆல்ரவுண்டர்கள் அதிக பாசம்… ஆனால் அணிக்குள் மூன்று பேர் எதற்கு?- அஜிங்யா ரஹானே கேள்வி!

கோலி ஆக்ரோஷமாக செயல்பட்டாலும் அதில் கிங்… ஆனால் கில்?- சஞ்சய் மஞ்சரேக்கர் விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments