Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிதான தொடக்கத்துக்கு சரியும் விக்கெட்கள் – விராட் கோலி போராட்டம்!

Webdunia
புதன், 2 டிசம்பர் 2020 (10:59 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்களை இழந்து போராடி வருகிறது.

இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான சுற்று பயண ஆட்டம் ஆஸ்திரேலியாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு ஒருநாள் போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இரண்டிலும் ஆஸ்திரேலிய அணி வென்று தொடரை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் டாஸ் வென்றுள்ள இந்தியா பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது.

இந்நிலையில் ஆரம்பத்தில் ஷிகார் தவான் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் நிதானமாக ஆட்டத்தை தொடங்க தவான் 16 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் கில்லுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் கோலியும் ரன்ரேட்டை குறைய விடாமல் சிறப்பாக எடுத்துச் சென்றார். கில் 33 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் வந்த ஸ்ரேயாஸ் மற்றும் கே எல் ராகுல் ஆகியோர் முறையே 19 மற்றும்  5 ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். இதனால் இந்தியா தற்போது 127 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது.

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 47 ரன்களுடனும் பாண்ட்யா 2 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவின் அதிரடியில் ஆட்டம் கண்ட நியூசி! 252 டார்கெட்! - சாதிக்குமா இந்தியா!

இந்திய சுழலில் விழுந்த மூன்று விக்கெட்டுகள்.. பைனலில் அசத்தும் இந்திய அணி..!

Champions Trophy Finals: நியூசிலாந்து பேட்டிங் தேர்வு! மீண்டும் மேஜிக் செய்வாரா வருண் சக்ரவர்த்தி! - ப்ளேயிங் 11 விவரம்!

இவர்தான் வெற்றிக்கும் தோல்விக்குமான காரணமாக இருப்பார்… முன்னாள் வீரர் கணிப்பு!

உங்கள் அணியைப் பற்றி நீங்கள் என்ன வேண்டுமானாலும் பேசலாம்… ஆனால்? – கவாஸ்கரை எச்சரித்த இன்சமாம்!

அடுத்த கட்டுரையில்
Show comments