Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முதல்நாளில் இந்தியா ஆதிக்கம்… ஆட்டமுடிவில் 36/1

முதல்நாளில் இந்தியா ஆதிக்கம்… ஆட்டமுடிவில் 36/1
, சனி, 26 டிசம்பர் 2020 (16:11 IST)
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் நாள் முடிவில் இந்தியா 36 ரன்கள் சேர்த்து ஒரு விக்கெட்டை இழந்துள்ளது.

தேநீர் இடைவெளிக்குப் பிறகு இந்திய பவுலர்களின் ஆதிக்கம் தொடர்ந்தது. சிறப்பாக வீசிய பூம்ரா மற்றும் அஸ்வின் மேலும் விக்கெட்களைக் குவிக்க ஆஸி, 195 ரன்களுக்கு ஆல் அவ்ட் ஆனது. இந்திய தரப்பில் பூம்ரா 4 விக்கெட்களையும் அஸ்வின் 3 விக்கெட்களையும் வீழ்த்தினர். ஆஸி தரப்பில் மார்னஸ் லபுஷேன் அதிகபட்சமாக 48 ரன்கள் சேர்த்தார்.

களமிறங்கிய ஆஸி அணியின் பேட்டிங்கை ஆரம்பம் முதலே இந்திய பவுலர்களான பூம்ரா மற்று  அஸ்வின் ஆகிய இருவரும் கட்டுப்படுத்தியுள்ளனர். இதனால் தேனீர் இடைவேளை வரை ஆஸி 135 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது. இந்திய அணி சார்பில் பும்ரா மற்றும் அஸ்வின் தலா 2 விக்கெட்களைக் கைப்பற்றினர். முகமது சிராஜ் தனது அறிமுகப்போட்டியில் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார்.

தேநீர் இடைவெளிக்குப் பிறகு இந்திய பவுலர்களின் ஆதிக்கம் தொடர்ந்தது. சிறப்பாக வீசிய பூம்ரா மற்றும் அஸ்வின் மேலும் விக்கெட்களைக் குவிக்க ஆஸி, 195 ரன்களுக்கு ஆல் அவ்ட் ஆனது. இந்திய தரப்பில் பூம்ரா 4 விக்கெட்களையும் அஸ்வின் 3 விக்கெட்களையும் வீழ்த்தினர். ஆஸி தரப்பில் மார்னஸ் லபுஷேன் அதிகபட்சமாக 48 ரன்கள் சேர்த்தார்.

அதன் பின்னர் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார். அதன் பின்னர் வந்த புஜாராவோடு சுப்மன் கில் இணைந்து விக்கெட்டைக் கொடுக்காமல் ஆடினார். இதன் மூலம் ஆட்ட நேர முடிவில் இந்தியா 36 ரன்கள் சேர்த்து ஒரு விக்கெட்டை மட்டும் இழந்தது. சுப்மன் ஹில் 28 ரன்கள் சேர்த்திருந்தார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பூம்ரா, அஸ்வின் அபாரம் – 195 ரன்களுக்குள் சுருண்ட ஆஸ்திரேலியா!