Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இங்கிலாந்தை சுருட்டிய இந்தியா… மீண்டும் கலக்கிய அக்ஸர் படேல்!

Webdunia
வியாழன், 4 மார்ச் 2021 (15:46 IST)
நான்காவது டெஸ்ட்டின் முதல் நாளில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியுள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையிலான டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடந்தது.  அந்த பிட்ச் இந்திய வீரர்களுக்கு சாதகமாக அமைக்கப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. அதையடுத்து விமர்சனங்களுக்கு இடையில் இன்று நான்காவது டெஸ்ட் போட்டி அதே மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.  இந்கப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார்.

அதையடுத்துக் களமிறங்கிய இங்கிலாந்து அணி ஆரம்பம் முதலே விக்கெட்களை இழந்து தடுமாற ஆரம்பித்தது. அந்த அணியின் பென் ஸ்டோக்ஸ் மற்றும் டேனியல் லாரன்ஸ் ஆகியோர் மட்டுமே சிறிது நேரம் தாக்குப்பிடித்து விளையாடினர். மற்றவர்கள் எல்லாம் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் தற்போது வரை இங்கிலாந்து அணி 199 ரன்கள் சேர்த்து 9 விக்கெட்கள் இழந்துள்ளது. இந்திய அணியின் அக்ஸர் படேல் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Free Ticket என கிளம்பிய வதந்தி..? ஆர்சிபி கொண்டாட்டத்தில் பலி போன 11 உயிர்கள்! - தப்பி பிழைத்தவர்கள் சொன்ன தகவல்!

ஐபிஎல் கோப்பைலாம் அதைவிட 5 மடங்கு கீழதான்.. நல்ல ப்ளேயரா வரணும்னா? - விராட் கோலி!

மீண்டும் வொர்க் அவுட் ஆனது ஹேசில்வுட்டின் இறுதிப் போட்டி அதிர்ஷ்டம்!

RCB அணி செல்லவிருந்த வீதியுலா கொண்டாட்டம் ரத்து… பின்னணி என்ன?

கோப்பையை வென்றுவிட்டதால் ஐபிஎல்-இல் இருந்து ஓய்வு பெறுகிறாரா கோலி?

அடுத்த கட்டுரையில்
Show comments