Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அம்பாத்தி ராயுடு அரைசதம், பாண்ட்யா அதிரடியால் தப்பித்தது இந்தியா –252 ரன்னுக்கு ஆல் அவுட்

அம்பாத்தி ராயுடு அரைசதம், பாண்ட்யா அதிரடியால் தப்பித்தது இந்தியா –252 ரன்னுக்கு ஆல் அவுட்
, ஞாயிறு, 3 பிப்ரவரி 2019 (11:04 IST)
இந்தியா நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 ஆவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்த இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 252 ரன்கள் சேர்த்துள்ளது.

இந்தியா நியுசிலாந்து அணிகளுக்கிடையிலான ஒருநாள் போட்டித் தொடர் 3-1 என்ற நிலையில் இந்தியா வென்றுள்ளது. இந்நிலையில் இன்று 5 ஆவது ஒருநாள் போட்டித் தொடங்கி நடந்து வருகிறது.

டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்கார்ர்களான ரோஹித் ஷர்மா மற்றும் தவான் இரண்டு பேரும் 2 மற்றும் 6 ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். அதையடுத்து சுப்மன் கில் 7 ரன்களிலும் தோனி 1 ரன்னிலும் வெளியேறினர்.

இதனால் இந்திய அணி 10 ஓவர்களில் 18 ரன்கள் மட்டுமே சேர்த்து 4 விக்கெட்களை இழந்து தடுமாறியது. அதையடுத்து அம்பாத்தி ராயுடு மற்றும் விஜய் ஷங்கர் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடி அணியை சர்வில் இருந்து மீட்டனர். சிறப்பாக விளையாடிய இருவரும் 5 ஆவது விக்கெட்டுக்கு 98 ரன்கள் சேர்த்தனர். சிறப்பாக விளையாடிய விஜய் ஷங்கர் 45 ரன்களில் ரன் அவுட் ஆகி வெளியேறினார்.
webdunia

சிறப்பாக மற்றொரு வீரரான அம்பாத்தி ராயுடு அரைசதம் அடிக்க அவருக்கு கேதார் ஜாதவு உறுதுணையாக இருந்தார். கேதார் ஜாதவ் 35 ரன்களில் ஆட்டமிழக்க அம்பாத்து ராயுடு 90 ரன்களில் ஆட்டமிழந்து சதத்தைத் தவறவிட்டார். இதனால் இந்தியா 203 ரன்களுக்கு 7 விக்கெட் எடுத்துத் தடுமாறியது அதையடுத்துக் களமிறங்கிய ஹர்திக் பாண்ட்யா அதிரடியாக விளையாடி 22 பந்துகளில் 45 ரன்களை சேர்த்தார். இதில் 2 பவுண்டரிகளும் 5 சிக்ஸ்களும் அடக்கம் இதையடுத்து வந்த வீரர்கள் உடனடியாக அவுட் ஆகி வெளியேற இந்தியா 49.5 ஓவர்களில் 252 ரன்களில் ஆட்டமிழந்தது.

நியுசிலாந்து தரப்பில் ஹென்றி  4 விக்கெட்களும் போல்ட் 3விக்கெட்டுகளும் ஜிம்மி நீஷம் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

5 ஆவது ஒருநாள் போட்டியில் இந்தியா தடுமாற்றம் – தனியாளாக போராடும் ராயுடு !