அஸ்வின் - பும்ரா அசத்தல் பவுலிங்: இந்தியா அபார வெற்றி!

Webdunia
திங்கள், 14 மார்ச் 2022 (19:55 IST)
இந்தியா மற்றும் இலங்கை இடையே நடைபெற்ற 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய பந்துவீச்சாளர்களின் அசத்தல் பந்துவீச்சு காரணமாக 238 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உள்ளது
 
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பெங்களூரில் கடந்த 12ஆம் தேதி தொடங்கியது. இந்தப்போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 252 ரன்களும் இரண்டாவது இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்பிற்கு 303 ரன்கள் எடுத்தன 
 
இதனையடுத்து இலங்கை அணி முதல் இன்னிங்சில் 109 ரன்கள் மட்டுமே எடுத்தது அடுத்து அந்த அணிக்கு 447 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால் அந்த அணி 208 ரன்களில் ஆல்-அவுட் ஆனதால் 238 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
 
இரண்டாவது இன்னிங்சில் அஸ்வின் மற்றும் பும்ரா 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த போட்டியில் இரண்டு இன்னிங்ஸிலும் சூப்பராக பேட்டிங் செய்த ஸ்ரேயாஸ் ஐயர் ஆட்ட நாயகன் விருதும், தொடர் நாயகனாக ரிஷப் பண்ட் தேர்வு செய்யப்பட்டார்கள்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அவர்கள் மேல் கம்பீர் நம்பிக்கை வைக்க வேண்டும்… கங்குலி அட்வைஸ்!

கேப்டன் ஷுப்மன் கில் இரண்டாவது போட்டியில் விளையாடுவது சந்தேகம்… !

மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளரான சங்ககரா!

பாலியல் புகாரில் சிக்கிய வீரரைத் தக்கவைத்து சர்ச்சையில் சிக்கிய RCB!

மேட்ச் முடிந்ததும் கழுத்து வலி சரியானது… மருத்துவமனையில் இருந்து திரும்பிய கில்!

அடுத்த கட்டுரையில்
Show comments