Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2வது டி20 போட்டி: ஜெய்ஸ்வால், ஷிவம் துபே அதிரடியால் இந்தியா வெற்றி..!

Siva
திங்கள், 15 ஜனவரி 2024 (06:05 IST)
இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றுள்ளது. 
 
இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி  20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 172 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 173 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இந்தியா விளையாடிய போது ரோஹித் சர்மா தான் சந்தித்த முதல் பந்திலையே விக்கெட்டை இழந்தார். 
 
இருப்பினும் ஜெய்ஸ்வால் 68 ரன்களும், ஷிவம் துபே 63 ரன்களும் அதிரடியாக அடித்து இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தனர்.  இந்திய அணி 15. 4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் எடுத்து அபாரமாக வெற்றி பெற்றது. 
 
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி  இதுவரை விளையாடி இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி ஜனவரி 17ஆம் தேதி பெங்களூரில் நடைபெற உள்ளது.
 
Edited by siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய பௌலர்கள் அபாரம்…. ஜிம்பாப்வே அணி நிர்ணயித்த எளிய இலக்கு!

கோலி, ரோஹித் ஷர்மா ஷர்மா இடத்தைப் பிடிப்பது இலக்கல்ல… கேப்டன் சுப்மன் கில் பேட்டி!

பைனலில் சிறப்பாக பேட் செய்ய முடியும் என்ற நம்பிக்கையே என்னிடம் இல்லை – கோலி பகிர்ந்த தகவல்!

சொந்த மக்களே என்னை வெறுத்தார்கள்… விளையாட்டின் மூலம் பதிலளிக்க வேண்டும் என விரும்பினேன் –ஹர்திக் பாண்ட்யா!

அது சஹாலோட ஐடியாதானே… ரோஹித்தின் ஸ்டைல் வாக் குறித்து கேட்ட பிரதமர் மோடி!

அடுத்த கட்டுரையில்
Show comments