Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வருவோம் அடுத்த வருடம் சூறாவளியாக! தோல்விக்கு பின் இம்ரான் தாஹிர் டுவீட்!

வருவோம் அடுத்த வருடம் சூறாவளியாக! தோல்விக்கு பின் இம்ரான் தாஹிர் டுவீட்!
, திங்கள், 13 மே 2019 (06:38 IST)
நேற்று நடைபெற்ற 2019ஆம் ஆண்டின் ஐபிஎல் இறுதி போட்டியில் சிஎஸ்கே அணி ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அந்த அணியின் வாட்சன் கடைசி வரை போராடியும் கடைசி ஓவரில் ரன் அவுட் ஆனதால் நூலிழையில் கோப்பையை தவறவிட்டது. 
 
இந்த நிலையில் வெற்றி அடைந்தாலும், தோல்வி அடைந்தாலும் டுவிட்டரில் ஆவேசமாக டுவீட் போடும் ஹர்பஜன்சிங் நேற்றைய தோல்விக்கு பின் எந்த டுவீட்டையும் பதிவு செய்யவில்லை. இருப்பினும் இம்ரான் தாஹிர் வழக்கம்போல் தமிழக ரசிகர்களுக்கு நன்றி கூறி ஒரு டுவீட்டை பதிவு செய்துள்ளார். அவர் தனது டுவிட்டரில் கூறியதாவது:
 
'என் இனிய தமிழ் மக்களே! விடை பெறுகிறேன் இங்கிருந்து, உங்கள் உள்ளங்களில் இருந்து. அன்பு, தோழமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கிய என் உடன் பிறப்புகளே நன்றி! வருவோம் அடுத்த வருடம் சூறாவளியாக.. என்றென்றும் உங்கள் அன்பு சகோதரன். நில்லாமல் இருக்கட்டும் விசில், எடுடா வண்டிய ... போடுடா விசிலை' என்று இம்ரான் தாஹிர் பதிவு செய்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரு ரன் வித்தியாசத்தில் கோப்பையை பறிகொடுத்த சிஎஸ்கே: 4வது முறை மும்பை சாம்பியன்!