Webdunia - Bharat's app for daily news and videos

Install App

18 வயதில் தங்கம் வென்று தமிழக வீராங்கனை சாதனை

Webdunia
வெள்ளி, 23 மார்ச் 2018 (16:26 IST)
சிட்னியில் நடைபெற்று வரும் ஜூனியர் உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தமிழக வீராங்கனை இளவேனில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
 
ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னியில் 7-வது ஜூனியர் உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடந்து வருகிறது. இதில் தமிழகத்தை சேர்ந்த 18-வயதான இளவேனில் என்ற வீராங்கனை 10 மீட்டர் ஏர் ரைபிள் இறுதிச்சுற்றில் 249.8 புள்ளிகளுடன் தங்கப்பதக்கத்தை வென்றார். 
 
இந்த வெற்றி குறித்து அவர் கூறியதாவது,
 
”சிட்னியில் என்னுடைய ஆட்டம் மிகவும் சிறப்பாக இருந்தது. நான் கடந்த சில மாதங்களாகவே சிறப்பாக செயல்பட்டு வருகிறேன் என்றார். மேலும், அவர் பெற்ற தங்கப்பதக்கத்தை தனது பெற்றோர்களுக்கு அர்ப்பணிப்பதாக தெரிவித்தார்.
 
இவர் போட்டியின் முன்னர் நடத்தப்பட்ட தகுதிச்சுற்று போட்டியில்  631.4 புள்ளிகள் பெற்று உலக சாதனை படைத்தது கூறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments