Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சாம்பியன்ஷிப் கோப்பை வார்ம்-அப் போட்டி: ஆஸ்திரேலியா அபார வெற்றி

சாம்பியன்ஷிப் கோப்பை வார்ம்-அப் போட்டி: ஆஸ்திரேலியா அபார வெற்றி
, சனி, 27 மே 2017 (07:00 IST)
ஐசிசி சாம்பியன்ஷிப் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் 1 முதல் தொடங்கவுள்ளது. இந்த நிலையில் பயிற்சி ஆட்டம் என்று கூறப்படும் வார்ம் அப் போட்டிகள் நேற்று முதல் தொடங்கியது.



 


முதல் ஆட்டத்தில் இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி இலங்கையை பேட்டிங் செய்யுமாறு கேட்டுக்கொண்டது. இதனால் முதலில் களமிறங்கிய இலங்கை அணி அபாரமாக பேட்டிங் செய்து 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 318 ரன்கள் குவித்தது. கேப்டன் குணரத்னே 95 ரன்களும், குணரத்னே 70 ரன்களும் குவித்தனர்

319 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியாவும் அபாரமாக விளையாடி இலங்கை பந்துவீச்சாளர்களின் பந்துகளை அடித்து நொறுக்கினர். இறுதியில் 49.4 ஓவர்களில் இரண்டு பந்துகள் மீதமிருக்கையில் 319 ரன்கள் எடுத்து த்ரில் வெற்றி பெற்றனர். பின்ச் 137 ரன்களும், ஹீட் 85 ரன்களும் எடுத்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட்: ஐசிசி ஆலோசனை!