Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூப்பர் ஓவர் முறையில் அதிரடி மாற்றம் – ஐசிசி அறிவிப்பு !

Webdunia
செவ்வாய், 15 அக்டோபர் 2019 (18:27 IST)
சூப்பர் ஓவர் முறையில் இனி வெற்றிக் கிடைக்கும் வரை மீண்டும் மீண்டும் ஓவர்கள் வீசப்படும் என ஐசிசி அறிவித்துள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த இங்கிலாந்து, நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை இறுதிப்போட்டி சமனில் முடிந்தது. இதையடுத்து வீசப்பட்ட சூப்பர் ஓவரும் சமனில் முடிய அதிக பவுண்டரிகள் அடித்த அணியான இங்கிலாந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இது கிரிக்கெட் உலகில் பல சர்ச்சைகளைக் கிளப்பியது. முன்னாள் வீரர்கள் மற்றும் விமர்சகர்கள் ஐசிசி-யின் இந்த முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இந்நிலையில் இன்று துபாயில் நேற்று நடந்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்  கூட்டத்தில் சூப்பர் ஓவர் விதிமுறையில் மாற்றம் கொண்டுவந்துள்ளது. அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி ‘இனி ஐசிசி நடத்தும் போட்டிகளில் போட்டி சமனில் முடிந்தால் முடிவு கிடைக்கும் வரை சூப்பர் ஓவர் வீசப்படும். பவுண்டரிகளின் அடிப்படையில் முடிவு எடுக்கப்படாது. அதே சமயம் லீக் போட்டிகள் சமனில் முடிந்தால் அது டையாகவே கருதப்படும்’ எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சதத்தை மிஸ் செய்த கே.எல்.ராகுல்.. சதத்தை நோக்கி கில்.. டிரா செய்யுமா இந்தியா?

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்தியா - பாகிஸ்தான் போட்டி எப்போது?

முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டை இழந்த இந்தியா.. சுதாரித்து விளையாடும் கே.எல்.ராகுல், கில்..!

ஜோ ரூட் 150, பென் ஸ்டோக்ஸ் 141.. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து இமாலய ஸ்கோர்..!

பும்ரா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறலாம்: முன்னாள் வீரர் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments