Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஐதராபாத் அபார வெற்றி! மீண்டும் சென்னையுடன் மோதுகிறது

ஐதராபாத் அபார வெற்றி! மீண்டும் சென்னையுடன் மோதுகிறது
, வெள்ளி, 25 மே 2018 (22:46 IST)
சென்னை அணியுடன் இறுதி போட்டியில் மோதும் அணி எது என்பதை நிர்ணயிக்கும் இன்றைய விறுவிறுப்பான போட்டியில் ஐதராபாத் அணி அபார வெற்றி பெற்றது. இதனை அடுத்து சென்னை அணியுடன் இந்த தொடரிலேயே 4வது முறையாக ஐதராபாத் மோதவுள்ளது.
 
இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி கொல்கத்தா விளையாடியது. 
 
webdunia
ஆட்டத்தின் 4வது ஓவரில் நரேன், 9வது ஓவரில் ராணா ,11வது ஓவரில் உத்தப்பா, மற்றும் 12வது ஓவரில் கேப்டன் தினேஷ் கார்த்திக் ஆகியோர் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுக்களை இழந்தனர். அதன்பின்னர் வந்த பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 161 ரன்கள் மட்டுமே எடுத்து 13  ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ஐதராபாத் அணி சென்னை அணியுடன் இறுதி போட்டியில் மோத தகுதி பெற்றுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இறுதி போட்டிக்கு தகுதி பெற கொல்கத்தாவிற்கு 175 ரன்கள் தேவை