Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேட்ச் பிக்சிங் விவகாரம்: 2 வீரர்களுக்கு வாழ்நாள் தடை

Webdunia
திங்கள், 26 ஆகஸ்ட் 2019 (20:27 IST)
கிரிக்கெட் போட்டிகளில் முடிவுகளை முடிவு செய்யும் மேட்ச் பிக்சிங் விவகாரம் அவ்வப்போது நடைபெற்று வரும் நிலையில் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக இரண்டு கிரிக்கெட் வீரர்களுக்கு வாழ்நாள் தடையும் ஒரு வீரருக்கு ஐந்து வருட தடையும் செய்யப்பட்டுள்ளது
 
கடந்த 2014ஆம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி போட்டி நடைபெற்றபோது ஹாங்காங் அணி, கனடா மற்றும் ஸ்காட்லாந்து அணிகளுடன் மோதியபோது ஹாங்காங் அணியின் அஹ்மத், நடீம் அஹ்மது மற்றும் ஹாசிப் அம்ஜத் ஆகியோர் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது
 
இதனையடுத்து இதுகுறித்த விசாரணை கடந்த ஐந்து வருடங்களாக நடைபெற்ற நிலையில் தற்போது மூவரும் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து ஐசிசி அதிரடியாக அஹ்மத், நடீம் அஹ்மது ஆகிய இருவருக்கும் வாழ்நாள் தடையும் ஹாசிப் அம்ஜதுக்கு ஐந்து வருட தடையும் விதித்துள்ளது. இந்த விவகாரம் கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித் சர்மா, கோஹ்லி மட்டுமல்ல, பும்ராவும் இல்லை.. இங்கிலாந்து செல்லும் இந்திய அணியின் கேப்டன் யார்?

ஓய்வு என்பது வீரர்களின் தனிப்பட்ட முடிவு… யாரும் ஒன்றும் செய்ய முடியாது – கம்பீர் விளக்கம்!

அடுத்தடுத்து வரும் நற்செய்திகள்… ஆர் சி பி அணியில் இணையும் வெளிநாட்டு வீரர்!

டெஸ்ட் அணியில் கோலியின் இடத்தைக் கைப்பற்றும் ஷுப்மன் கில்?

RCB அணிக்கு மகிழ்ச்சியான செய்தி… அணிக்குள் வரும் முக்கிய வீரர்!

அடுத்த கட்டுரையில்
Show comments