இந்தியா - இலங்கை ஒருநாள் போட்டி தினத்தில் விடுமுறை: அரசு அறிவிப்பு

Webdunia
திங்கள், 9 ஜனவரி 2023 (12:48 IST)
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெற்ற டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது என்பதை பார்த்தோம்.
 
இந்த நிலையில் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நாளை தொடங்க உள்ளது .முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அசாம் தலைநகர் கவுகாத்தி நகரில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் கவுகாத்தியில் உள்ள ஒரு சில பகுதிகளுக்கு மட்டும் நாளை அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு மதியம் ஒரு மணிக்கு மேல் விடுமுறை என அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
நாளை நடைபெறவிருக்கும் போட்டியில் ரோகித் சர்மா, விராத் கோலி, கேஎல் ராகுல் உள்பட பலர் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

22 ரன்களில் 2 விக்கெட்டுக்களை இழந்த இந்தியா.. தோல்வியின் விளிம்புக்கு செல்கிறதா?

எனக்கென்னவோ இது சரியாப் படல… இந்திய வீரர்களின் செயலால் அதிருப்தி அடைந்த அஸ்வின்!

5 விக்கெட் இழந்தவுடன் டிக்ளேர் செய்தது தென்னாப்பிரிக்கா.. இந்தியாவுக்கு 500க்கு மேல் இலக்கு..!

கிரிக்கெட்டை அடுத்து கபடி.. இந்திய மகளிர் அணி உலக சாம்பியன்.. குவியும் வாழ்த்துக்கள்..!

201 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன இந்தியா… ஃபாலோ ஆன் கொடுக்காத தென்னாப்பிரிக்கா!

அடுத்த கட்டுரையில்
Show comments