Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் வந்துட்டேன்னு சொல்லு- தமிழில் டுவிட் செய்த சிஎஸ்கே வீரர்

Webdunia
வியாழன், 22 மார்ச் 2018 (21:31 IST)
இந்திய அணியின் பிரபல சுழற்பந்து வீச்சாளராக இருந்த ஹர்பஜன் சிங் சமிபத்தில் நடந்த ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினரால் ஏலம் எடுக்கப்பட்டார் . ஏலம் எடுக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே தமிழில் டுவீட் செய்து அசத்திய ஹர்பஜன் இன்று சிஏஸ்கே அறிமுக விழாவில் கலந்து கொள்ள சென்னை வந்திருந்தார்

ஹர்பஜன் சென்னை வந்தவுடன் அவர் செய்த முதல் வேலை தமிழில் ஒரு டுவீட்டை தட்டிவிட்டதுதான். அதில் 'கபாலி' படத்தில் ரஜினி பேசும் வசனமான  நான் வந்துட்டேன்னு சொல்லு' என்று ஆரம்பித்து டுவீட் செய்துள்ளார். அவரது டுவீட் இதுதான்:

நான் வந்துட்டேன்னு சொல்லு

தமிழின் அன்பு உடம்பெறப்பெல்லாம் எப்புடி இருக்கீக மக்கா.

உங்க வீட்டுப்புள்ள சேப்பாக்கத்துல, மஞ்ச ஜெர்சில, "வீரமா", காதுகிழியிற உங்க விசிலுக்கு நடுவுல @ChennaiIPL க்காக விளாட(ச) போறத நெனச்சாலே "மெர்சலாகுது"

தாய் உள்ளம் கொண்ட அன்பு தமிழ்நாடு வாழ்க!!!!

மேலும் ஹர்பஜன் சிங் பதிவு செய்த இன்னொரு டுவிட்டில் அவர் பெயர் அச்சிடப்பட்ட சென்னை அணியின் ஜெர்சியின் படத்தை பதிவு செய்துள்ளார். அதில் 27 என்ற எண் அச்சிடப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா Under 19 அணியின் கேப்டன் ஆனார் சிஎஸ்கே வீரர் ஆயுஷ் மாத்ரே.. சூர்யவம்சிக்கும் இடம்..!

நியுசிலாந்து விக்கெட் கீப்பரை மாற்று வீரராக ஒப்பந்தம் செய்த RCB..!

500 மிஸ்ட் கால்கள்… நான் விலகி இருக்க விரும்புகிறேன்- சுட்டிக் குழந்தை சூர்யவன்ஷி!

விராட் கோலி இல்லாமல் விளையாடுவது அவமானகரமானது… இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கருத்து!

ரிஷப் பண்ட்டின் பிரச்சனைகளை நான் ஐந்து நிமிடத்தில் சரி செய்துவிடுவேன் –யோக்ராஜ் சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments