Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏன் இந்தியாவால் உலகக் கோப்பை போட்டியில் விளையாட முடியாது? ஹர்பஜன் சிங்

Webdunia
செவ்வாய், 17 ஜூலை 2018 (13:16 IST)
50 லட்சம் மக்கள் கொண்ட குரேஷியா உலகக் கோப்பை போட்டியில் விளையாடும் போது நாம் ஏன் விளையாட முடியாது என்று இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.

 
நேற்று முன்தினம் ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் குரேஷியா, பிரான்ஸ் அணியிடம் தோல்வி அடைந்தது. இருந்தாலும் குரேஷியா முதல் முறையாக இறுதி போட்டிக்கு முன்னேறி பலரது பாராட்டுகளை பெற்று வருகிறது. 
 
50 லட்சம் மக்கள் தொகை கொண்ட குட்டி நாடான குரேஷியா இறுதி போட்டியில் விளையாடியதை அனைவரும் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-
 
50 லட்சம் மக்கள் தொகை குட்டி நாடான குரேஷியா பைனல் விளையாடுகிறது. ஆனால் 135 கோடி மக்கள் தொகை கொண்ட நாம் இந்து,  முஸ்லிம் என போட்டி போடுகிறோம். சிந்தனையை மாற்றினாலும் நாடு மாறும் என்று ஹர்பஜன் தெரிவித்துள்ளார்.
 
உலகிலே கிரிக்கெட்டுக்கு இந்தியாவில்தான் அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர் அண்மையில் ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கிரிக்கெட் வீரரின் கால்பந்து விளையாட்டின் மீதான் அக்கறை சற்று மகிழ்ச்சி அளிக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கில் இன்னிங்ஸுக்கு நடுவே சோம்பேறியாகிவிடுகிறார்… ரிக்கி பாண்டிங் விமர்சனம்!

விராட் கோலி மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்குத் திரும்புவார்- மைக்கேல் கிளார்க் நம்பிக்கை!

ODI –ல் சதமடித்தாலும் பாராட்டமாட்டார்.. ஆனால் டெஸ்ட்டில் 50 ரன்கள் அடித்தாலே…- அப்பா குறித்து ரோஹித் நெகிழ்ச்சி!

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அனைத்து விதமானக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு.. பியுஷ் சாவ்லா அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments