Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு பந்துகூட வீசப்படாமல் குஜராத் - கொல்கத்தா போட்டி ரத்து.. தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிப்பு..!

Siva
செவ்வாய், 14 மே 2024 (06:36 IST)
ஐபிஎல் போட்டிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று குஜராத் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற இருந்தது.

கொல்கத்தா ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற நிலையில் குஜராத் ஏற்கனவே கிட்டத்தட்ட வெளியேறிய நிலையில் நேற்றைய போட்டி சுவாரஸ்யம் இல்லாமல் தான் நடக்கும் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் நேற்று போட்டி தொடங்குவதற்கு முன்பு மழை பெய்ததை அடுத்து போட்டி தாமதமாக தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்ததை அடுத்து ஒரு கட்டத்தில் போட்டி நடத்த முடியாது என்பதை முடிவு செய்த நடுவர்கள் போட்டி ரத்து என்று அறிவித்தனர்.

இதனை அடுத்து இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் பகிர்ந்து அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை எடுத்துக் கொல்கத்தா அணி தற்போது 19 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது என்பதும் குஜராத் அணி 11 புள்ளிகளுடன் எட்டாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குஜராத் இன்னும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றாலும் கூட அந்த அணி அடுத்த சுற்றுக்கு செல்ல வாய்ப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 இந்த நிலையில் இன்று டெல்லி மற்றும் லக்னோ அணிகளுக்கிடையான போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு பிளே ஆப் செல்ல ஓரளவுக்கு வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் மீண்டும் தொடங்கும்போது ‘அதெல்லாம்’ இருக்கக் கூடாது – சுனில் கவாஸ்கர் கோரிக்கை!

ப்ரீத்தி ஜிந்தாவை மேக்ஸ்வெலுடன் தொடர்பு படுத்தி பேசிய ரசிகர்! - ப்ரீத்தி ஜிந்தா கொடுத்த பதிலடி!

கோலி, ரோஹித் இந்திய அணியில் இல்லைன்னு யார் சொன்னா? - பிசிசிஐ செயலாளர் கொடுத்த அப்டேட்!

மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளில் ஆடல், பாடல் கொண்டாட்டம் வேண்டாம்! - சுனில் கவாஸ்கர் வேண்டுகோள்!

ஐபிஎல் தொடங்கும் அதே நாளில் பி.எஸ்.எல் போட்டிகளை தொடங்கும் பாகிஸ்தான்! வெளிநாட்டு வீரர்கள் வருவார்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments